Thursday, 2 May 2013

ஓ,,, கிராமங்களே!

வளைந்து நெளிந்த ஓடை
மீன் பிடிக்கும் சோம்பேறி கிழவன்
ஒற்றையடி பாதை
'ம்மே' என்று ஈன ஸ்வரத்தில்
அழைக்கும் ஆடுகள்...!
பச்சை பசேல் வயல் வெளிகள்...
தலையாட்டும் கதிர்கள்

வரப்பில் சுற்றும்
அழுக்கு டிராயர் பையன்கள்
தூரத்தில்
படத்துக்கு பாட்டு போட்டு
அழைக்கும் டெண்ட் தியேட்டர்!
அனல் கக்கினாலும்
அழகாகக காட்சிதரும்
அந்தி சூரியன்...
சிலுசிலுவென...
இதமான மாலை குளிர்
எங்கோ டவுன் பஸ்ஸின் அலறல்
- ஓ என் அழகு கிராமங்களே
நீங்கள் வாழ்க
நீங்கள் வாழ்ந்தால்தான்
எங்கள் தமிழ் கவிஞர்கள்
வாழ்வார்கள்.

No comments:

Post a Comment