குண்டு மல்லி வைத்தவள்
குண்டு வெடித்த கதையை
குறு நகையுடன் கூறிவிட்டு
அடுத்த செய்திக்குப் போகிறாள்
அவளுக்கு,
இன்னொரு செய்தி
இன்னொரு நாள்
இன்னொரு காலை.
எட்டு மணி நேரம் ஓட்டிய பின்...
வீட்டுக்குப் போகவேண்டும்
வீட்டுக்காரர் காத்திருப்பார்
வாழ்க்கையில் எல்லாமே
மறத்து போய்விட்டது -
அது நம்மை தொடாதவரை!
குண்டு வெடித்த கதையை
குறு நகையுடன் கூறிவிட்டு
அடுத்த செய்திக்குப் போகிறாள்
அவளுக்கு,
இன்னொரு செய்தி
இன்னொரு நாள்
இன்னொரு காலை.
எட்டு மணி நேரம் ஓட்டிய பின்...
வீட்டுக்குப் போகவேண்டும்
வீட்டுக்காரர் காத்திருப்பார்
வாழ்க்கையில் எல்லாமே
மறத்து போய்விட்டது -
அது நம்மை தொடாதவரை!
No comments:
Post a Comment